Saturday, January 23, 2010

விளம்பரம் - ஒரு வரலாறு

பண்டைய காலத்தில் விளம்பரம் ஒரு தேவை பொருளாக இருந்தது, ஆனால் இன்று அது ஒரு போதை பொருளாக மாறிவிட்டது. ஆம் சற்றே சிந்தித்து பார்த்தால் பல விடயங்கள் நம் கண் முன் வந்து போகும். ஆம்,

எகிப்தியர்கள்,விற்பனை செய்திகள் மற்றும் சுவரொட்டிகளுக்கு பாபிரசை பயன்படுத்தினார்கள் . பண்டைய அரேபியா மற்றும் போம்பீயில் சிதிலங்களில் வணிகச்செய்திகளும், அரசியல் பிரச்சாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பண்டைய கிரேக்க மற்றும் ரோமில் தொலைந்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பந்தமான பாபிரஸ் விளம்பரங்கள் சாதாரணமானவை.

பண்டைய காலத்து விளம்பரவகைகளில் சுவர் அல்லது பாறை ஓவியங்கள் மற்றொரு வகைத்திருப்பம் ஆகும். இவ்வகை இன்றும் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருக்கின்றன. 4000 BCE - க்கு முன்னாள் இருந்தே சுவர் ஓவிய பாரம்பரிய நாகரிக வழக்கம் இந்தியப்பாறை கலை ஓவியங்களில் நாம் காணலாம்.

இடைக்கால ஆண்டுகளில் நகரங்களும் ,பெரு நகரங்களும் வளர்ந்து வந்த நிலையில், மற்றும் வாசிக்கத் தெரியாத பொதுமக்கள் மத்தியில் இன்றைய கால கட்டத்தில்,செருப்பு தைப்பவர், மாவுமில் வைத்திருப்பவர், தையல்க்காரர்,அல்லது கொல்லர் தங்கள் தொழில் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை அடையாளமாக பயன்படுத்தும்போது, அதாவது ஒரு காலணி, ஒரு சட்டை, ஒரு தொப்பி, ஒரு கடிகாரம், ஒரு குதிரை லாடம் , ஒரு மெழுகுவர்த்தி, அல்லது ஒரு பை மாவு அவர் செய்யும் தொழிலை இந்த அடையாளங்களின் மூலம் மக்கள் புரிந்துகொண்டார்கள்.

 காய்கறி மற்றும் பழங்களை நககரத்தின் நார்ச்சந்திகளில் தங்கள் வண்டிகளிலும், மற்றும் வாகனங்களின் மீதும் வைத்து விற்கும் அவற்றின் சொந்தக்காரர்கள், தெருவில் கூவுபவர்களையும், அல்லது நகர தம்பட்டக்காரர்களையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தங்கள் இருப்பிடத்தை இவர்கள் மூலம் அறிவிப்பார்கள்.

 பொது வாழ்க்கையில் அரசியல், சினிமா, வணிகம், விளையாட்டு, சமயம், மென்பொருள் போன்ற எல்லா துறைகளிலும் விளம்பரம் அதிவேகமாக வளர்ந்து, அவர்கள் ஆட்டத்தில் நம்மை ஆட்டிவைக்கிறது.

விளம்பரம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது சேவையை விளக்க மேற்கொள்ளப்படும் தொடர்பாடல் ஆகும். விளம்பரங்கள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்படலாம்.

அச்சு ஊடகம்(செய்தித்தாள்), காட்சி ஊடகம்(தொலைக்காட்சி) மற்றும் இணைய ஊடகம்(இணையம்) என்று அனைத்து வழியிலான ஊடகங்களிலும் விளம்பரம் இடம் பெற்றிருக்கிறது.இந்த விளம்பரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாடுகளிலும் சட்டங்கள் பாதுகாப்பு அளித்தாலும் விளம்பரத்தை பகுத்தாய்ந்து செயற்படுவது மக்களின் பொறுப்பாகவே பெரிதும் இருக்கிறது.

விளம்பரங்கள் வெளியிடப்படுவதற்கு முக்கிய நோக்கங்களாக கீழ்காண்பவைகள் இருக்கின்றன.
  • புதிய பொருள் அல்லது பணி விற்பனைக்கு வருவதை அறிவிக்க உதவுகிறது.
  • புதிதாகப் பொருள்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது,
  • விற்பனை முறை, விலை, கட்டு, இடம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைத் தெரிவிக்க உதவுகிறது, 
  • விற்பனையில் தள்ளுபடி, சலுகை போன்றவைகளைத் தெரிவிக்க உதவுகிறது, 
  • பொருள்களின் சிறப்புத் தன்மைகளை அறிவிக்க உதவுகிறது, 
  • பொருள்களை நினைவுபடுத்த உதவுகிறது, 
  • முதலீட்டாளர்களைக் கவர்ந்திட உதவுகிறது, 
  • தகுதியான ஆட்களைத் தேர்வு செய்ய உதவுகிறது, 
  • வணிக வெற்றி மற்றும் சாதனைகளை வெளிப்படுத்த உதவுகிறது, 
  • இப்படி இதன் பயன்கள் எண்ணிலடங்காமல் தொடர்கிறது...
 ஒரு சிலவற்றின் அதிக அதிவேக விளம்பரத்தால் தரமற்றவைகள் அதிகமாக வெற்றியடைகிறது, இதனால் நல்ல தரமானவைகள் அழிக்கபடுகிறது என்பதே உண்மை.

இன்று விளம்பரம் இல்லாமல் முன்னேற, வெற்றியடையவே முடியாது என்ற நிலைமைக்கு தள்ளபட்டிறிருக்கிறோம். மேல்தட்டு மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை அவர்களுடைய தகுதிக்கு ஏற்றார் போல் விளம்பரம் செய்கின்றனர்.

இதனுடைய தொடர்ச்சியான அடுத்த பதிவில் ஒவ்வொரு துறையிலும் செய்யும் விளம்பரமும், அதனால் மக்கள் பாதிப்படைவதையும் பார்ப்போம்.

விளம்பரத்தைப் பற்றி எழுத்தாளர் செயமோகன் கூறியவையை படிக்க கீழே உள்ள இணைப்பை படிக்கவும்,

http://www.jeyamohan.in/?p=2847


Saturday, January 16, 2010

தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனிவழி

வெற்றி தான் வாழ்க்கை என்றால் மரணத்திடம் நாம் தோற்பது ஏன்...?
தோல்வி தான் வாழ்க்கை என்றால் மூடிய இமைகள் தினம் திறப்பது ஏன்...?

பெரும்பாலானவற்றைப் போல வெற்றியும், தோல்வியும் மனிதனால் உருவாக்கப் பட்ட ஒரு விடயமே. இந்த இரண்டை வைத்துக் கொண்டு ஒருவனின் வாழ்க்கையை முடிவெடுக்க முடியாது.



வாழ்க்கை பாதைகளில் நாம் கடந்து செல்லும் சிறிய மேடு, பள்ளங்கலே வெற்றியும், தோல்வியும். இது கொஞ்சம் பழமையாக இருந்தாலும் இது தான் தன்னம்பிக்கையின் உண்மை.

இலக்கு என்பது ஒருவனுக்கு முடிவல்ல. அது எண்ணிக்கையற்றது. ஒரு இலக்கை அடைந்ததும் அதை விட சிறந்த இன்னொரு இலக்கு வரும். அதை நோக்கி புறப்பட வேண்டுமே தவிர என்னுடைய இலக்கு முடிவடைந்து விட்டது என்று நிலைக் கொள்வதல்ல.

வெற்றியடைந்த குதிரைக்கு தெரியும் அது ஏன் பந்தயத்தில் வெற்றி பெற்றது என்று. அதன் மீது சாட்டைகளால் ஏற்படும் வலிகளே அதற்கு காரணம். ஆம்,

வாழ்க்கை ஒரு பந்தயம், அதில் நாம் குதிரைகள், இறைவன் தான் நம்மை ஓட்டும் மேய்ப்பாளன். நம் வாழ்க்கையில் சாட்டை அடிகளால் ஏற்படும் வலிகள் அனைத்தும் நாம் வெற்றியடையவே.....!

வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டே இருப்பதை விட ஒருமுறையாவது விழுந்து எழுவதே சிறந்தது. எழாமல் விழுந்த இடத்திலே முடங்கி கிடந்து சாவது தான் கோழைத் தனம்.

என்னோடு கல்லூரி படிப்பை படித்த என் நண்பன், பெயர் சொல்ல விருப்பம் இல்லை.சமூகத்தின் மீது மிகுந்த அக்கரைக் கொண்டவன். வகுப்பில் பல உலக விடயங்களைப் பற்றி எப்போதும் அலசி கொண்டிருப்போம். அவன் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். அந்த பெண்ணும் இவனை காதலித்து வந்தாள்.

இந்த விடயம் அறிந்த அவளது பெற்றோர் சில வருடங்களுக்கு முன்பு திடீர் என்று அவளுக்கு திருமணம் நிச்சயித்துவிட்டார்கள். இதனால் என் நண்பனுக்கும் அவளுக்கும் தகராறு ஏற்ப்பட்டது.

என்னிடம் வந்து என்னை அவள் ஏமாற்றி விட்டாள் என அழுதுக் கொண்டே கூறினான்.
நானும் அவனுக்கு ஆறுதலாக, "விடுடா, எல்லாம் நன்மைக்குனு நினைச்சுக்கோ...!, ஒலுங்கா ஒரு நல்ல வேலைய தேடி, வாழ்க்கையில முன்னேரப் பாருடா" என ஊக்கம் கொடுத்தேன்.

சில நாட்களுக்கு பிறகு,

அவளுடைய திருமண நாளில், என் நண்பன் தொலைபேசியில், "அழுதுக் கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்றான்.

பதற்றத்துடன், "எங்கடா இருக்க.....!", என கேட்டேன்

மலையிலிருந்து குதிப்பதற்காக, மதுரையிலிருந்து கொடைக்கானல் மலைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினான்.

"டேய் முட்டால், என்ன காரியம்டா பண்ணபோர, மொதல்ல, பஸ்ல இருந்து எறங்குடா, பைத்தியக்காரா...." எனக் திட்டினேன்.

ஒரு வழியாக பேசி அவனை சமாதானம் செய்வதற்குள் நானே பாதி செத்துவிட்டேன்.

இன்று அவன் ஒரு கணிப்பொறியாளனாக சென்னையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இன்று தற்கொலை என்பது ஒரு சாதாரண விடயம் ஆகிவிட்டது. ஆம்,

தேர்வில் தோத்தால் தற்கொலை, காதலில் தோத்தால் தற்கொலை, வணிகத்தில் தோத்தால் தற்கொலை என்று தோல்வியை ஒரு முடிவாக ஏற்று வாழ்க்கையயை முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி கொண்டே இருக்கிறது

இந்த உலகத்தில் வாழும் மனிதனுக்கு வேறு ஒரு உயிரை கொடுக்க உரிமை இருக்கே தவிர, அவனுடைய உயிரை எடுக்க அவனுக்கு உரிமை இல்லை.

ஒரு பழைய புதுமொழி,
"வெற்றி என்பது உங்கள் நிழல், அதை பிடிக்க முற்ப்பட்டவனுக்கு தோல்வியே வரும், அந்த நிழலை விட்டுவிட்டு உன்னுடைய தனிவழியில் தன்னடக்கத்தோடு சென்று கொண்டே இருந்தால் அந்த வெற்றி எப்போதும் உன்னுடனே வரும்."