Saturday, December 26, 2009

போர்க்களம்

ஆதி காலம் தொட்டே கருப்பர்களுக்கும் சிவப்பர்களுக்கும் இனவெறி பிரச்சனையால் பலமுறைப் போரிட்டுள்ளனர்..

ஆம்...! கருப்பின தலைவனின் மகனும், சிவப்பின தலைவனின் தமக்கையும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இந்த விருப்பத்தை அறிந்த இனவெறிப் பிடித்த சிவிப்பன தலைவன் கருப்பின தலைவனின் மகனை கொலை செய்தான்.


சில காலங்களுக்கு பிறகு,

கி.பி.1919 ஆம் வருடம், கார்த்திகை மாதம்., வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டது, ஊடகங்களில் மழை வர வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆதலால் மக்கள் வழமைப்போல் கடைவீதியிலும், சாலைகளிலும் திரிந்துகொண்டிருந்தனர்.

ஆனால் இன்று மழை வரும் என்று முன்பே அறிந்த கருப்பர்களும், சிவப்பர்களும் அடைமழையிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள கடைவீதியில் உள்ள ஒரு பெரிய இனிப்பகத்தில் முகாமிட்டனர்.

மழைக்காலம் என்பதால், எதிர் வரும் நாட்களுக்காக உணவுப்பொருள்களை சேமித்துக் கொள்ளும்படி கருப்பர்களின் தலைவனும், சிவப்பர்களின் தலைவனும் அறிக்கையிட்டனர்.

தலைவனின் கட்டளையை ஏற்று, இரு இனத்தவர்களும் தங்களின் குடும்பத்துக்காக உணவுப்பொருள்களை சேமிக்க தொடங்கினர்.

அன்று தான் இனிப்பகத்தில் வகைவகையாக, புதுமாதிரியான இனிப்புகள் விற்பனைக்காக தரையிரக்கப்பட்டிருந்தது. அதே கணத்தில் கடையின் முதலாளி சற்று கண் மூடிய நேரத்தில் கருப்பர்களில் பலரும், சிவப்பர்களில் சிலரும் அந்த இனிப்புகளை களவாட தொடங்கினர். இந்த களவாடலில் இரு இனத்தவர்களுக்கும் சிறுமோதல் ஏற்ப்பட்டது. இந்த மோதலில் சிவப்பின தலைவனின் தமக்கையின் கால் முறிந்து போனது. இந்த சலசலப்பால், கண் திறந்த முதலாளி மோதலை தடுத்து அவர்களை அங்கிருந்து விரட்டினார்.

"களவானி கூட்டங்க....!, இவங்களை எவ்வளவு விரட்டியும், அடித்தும் திருந்தவே மாட்டுராங்க,...." , என கடையின் முதலாளி மனதுக்குள் முனுமுனுத்தார்.

தன் தமக்கையின் கால் முறிந்த சேதி கேட்ட சிவப்பன், கருப்பர்களை அழிக்க போருக்கு ஆயத்தம் ஆகும் படி தன் சகாக்களுக்கு கட்டளையிட்டான்.

கருப்பர்களும் போருக்கு தயாரானார்கள். இந்த முறை எப்படியாவது சிவப்பர்களை பழிதீர்த்து விடவேண்டும் என எண்ணி, தன் மக்களை வேண்டினான் கருப்பன்.

போருக்கான நேரம் தொடங்கியது, அதே இனிப்பகத்தில் போர் மூண்டது.

அவர்களை தாக்குங்கள்...!, என கருப்பர்களின் தலைவனும், சிவப்பர்களின் தலைவனும் கூற மண் பொறி கிளப்பி இரு கூட்டத்தார்களின் ஆவி அனல் பறக்க சண்டையிட்டனர்.

விழாக்காலம் என்பதால் மற்ற மக்களின் கூட்டம் அந்த இனிப்பகத்தில் அலை மோதியது. மக்கள் கூட்டத்தைப் பார்த்த கருப்பர்களும், சிவப்பர்களும் போரை நிருத்தும் படி கூறி அந்த இடத்தை விட்டு தப்பிக்க முற்ப்பட்டனர். ஒரு சிலரை தவிர மற்றவர்கள், அங்கு வந்த மக்களின் காலடி மிதியால் இரு இனத்தவர்களும் துண்டு துண்டாக உயிர் விட்டனர்.

சில மணித்துளிகளுக்கு பின்பு,

இரு கூட்டத்தார்களிடமும் எண்ணில் அடங்கா உயிர் சேதம் ஏற்ப்பட்டது. அந்த போர்க்களபூமி மயானபூமி ஆனது.

மழை வரும் காலம் அறிந்த கருப்பு நிற எறும்புகளும், சிவப்பு நிற எறும்புகளும் மானிடர்கள் வரும் காலத்தை மறந்து இனவெறிக் கொண்டு மண்ணோடு மண்ணாகினர்.

Saturday, December 19, 2009

பயணிகள் கவனத்திற்கு

தினமும் என்னோடு, என் வாழ்க்கையோடு பயணிக்கிறவர்கள் எண்ணற்றோர். அவர்களுள் என்னை மிகவும் பாதித்தவர்கள் இருவர் மட்டுமே. அந்த இருவர்கள் எப்பொழுதும் என்னுடனே இருப்பவர்கள். எனனாலே அவர்கள் தினமும் பிழைப்பை நடத்துகிறார்கள். அவர்களுடைய முன்னேற்றத்தில் நானும் ஒரு காரணியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஆம்...! அந்த இருவரைப்ப்ற்றிய கதையை தான், நான் இப்பொழுது உங்களுக்கு சொல்ல போகிறேன்.

"என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே, என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்", என பாடிக்கொண்டவாரே தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார இரயிலான என்னில் பயணிக்கும் ஒரு கண்தெறியாத குருட்டுப் பாட்டுக்காரி, கயல் என்கிற கயல்விழி.



அன்று, திங்கள் கிழமை என்பதால், என்னுடைய வீட்டில் அலுவல் செல்லும் பயணிகளால் மிக நெரிசல். இருக்கையில் அமர்ந்திருந்த பெண்களின் கழுத்தையும், நின்றுக்கொண்டிருந்த ஆண்களின் பணப்பையையும் பதம் பார்த்தபடியே, என் மேல் எழுதப்பட்ட வாசகங்களை படித்தான் சொக்கு, அது..,

பயணிகளின் கவனத்திற்கு
******************************************
1.) திருடர்கள் ஜாக்கிரதை
2.) புகைப்பிடிக்காதீர்
3.) தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் ரூபாய்.500 வசூலிக்கப்படும்.

என்னில், தினமும் நெரிசலில் சிக்கி அலுவலகம் செல்லும் மக்களின் மூலமாக தன் வாழ்க்கைசக்கரத்தை ஓட்டும் ஒரு திருடன், சொக்கு என்கிற சொக்கலிங்கம்.

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை, மக்கள் கூட்டம் இல்லாததால், வாசல் கதவோரமாக உட்கார்ந்திருந்த கயலிடம் தன் வேலையைக் காட்டினான். தன் விரிப்பில் உள்ள சில்லரைகளையும், ஐந்து, பத்து ரூபாய்களை எடுக்க முற்ப்பட்டுக் கையை நீட்டிய சொக்கனை பிடித்தாள், கயல்.

சட்டென்று தன் கையில் உள்ள கத்தியை வைத்து கயலின் கையை கீறினான் தப்பிக்க முயன்றான் சொக்கு. அதற்குள் அங்கு சுற்றியுள்ள மற்ற பிச்சைக்காரர்க்ள் சொக்கனை வலைத்துப் பிடித்தனர்.

"ஏண்டா கூருக்கெட்டவனே, அந்தப் புல்லையே பாட்டுப்பாடி பொழைக்குது அதுக்கிட்ட ஏண்டா உன் வேலையக் காட்டுர.." என்றாள் ஒரு பயணி.

"இப்படி உழைக்கரமக்கள்க் கிட்ட இருந்து, உடம்பு கூசாமா திருடி சாப்புட்டா உன் சாவுக்குக் கூட நாலு பேர் வரமாட்டாங்கடா...",

" இந்த பொழப்புக்கு, நீ பிச்சைஎடுக்கலான்டா படுபாவி ",

"காலனா சம்பாதிச்சாலும் வியர்வை சிந்தி உழைச்சி சாப்படுனுன்டா..."

எனக்கு கண்ணு தெரியிலனாலும் பாட்டுப்பாடி உழைச்சுதான்டா, பிழைப்பு நடத்துறேன்.

"ஆனால் நீ கை, கால், உடம்பு சரியா இருந்தும் கேவலம் அடுத்தவன் உழைப்ப திருடுறியேடா...", என அழுதுகொண்டே சொல்லி மயங்கி கீழே விழுந்தாள் கயல்.

அவளை தாங்கிப் பிடித்த சொக்கு, தன் சட்டையை கழற்றி இரத்தம் வடிந்து கொண்டிருந்த கயலின் கையை கட்டிவிட்டு, மனம் நொந்து அங்கிருந்து சென்று விட்டான்.

சில நாட்களுக்கு பிறகு,

அதே என்னுடைய வீட்டிலே, கூட்ட நெரிசலில், "சுண்டல்..சுண்டல்...சூடா சுண்டல்....!" என்று கத்திக் கொண்டே சுண்டல் விற்றான் சொக்கு.

"கயலின் பாட்டுக் கேட்டு, சட்டென திரும்பிய சொக்கு", கயலை பார்த்தான்.

"தன் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை கயலின் கையேந்திய விரிப்பில் போட்டான்", சொக்கு.. இது வழமையாக நடந்தது, தான் உழைத்து சம்பாதிக்கும் மொத்த பணத்தில் ஒரு பங்கை கயலுக்கு தினமும் கொடுத்தான். இந்த நிகழ்வு கயலுக்கு தெரியாது.

பண உதவி மட்டும் இல்லாமல், கயலுக்கு கண்ணாக இருந்தான் சொக்கு. இந்த அழகான உறவை விளக்க வார்த்தை இல்லை.

வியாழக் கிழமை காலை 8 மணி, சென்னை மாம்பலத்தை கடந்து நான் தாம்பரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். என் கதவோரமாக கயல் உட்கார்ந்து பாடிக்கொண்டே கையை ஏந்தி கொண்டிருந்தாள்.

அன்று கூட்ட நெரிசல் வழமைக்கு அதிகமாகவே காணப்பட்டது. மூச்சுவிடவே வழியில்லாமல் பயணிகள் தள்ளுமுள்ளாடிக்கொண்டிருந்தனர். அதில் சில பயணிகளின் இடிபாட்டால் கதவோரம் இருந்த கயலை கீழேத் தள்ளினர்.

ஆஆஆஆஆ.....ஆஆ........ என கத்திக்கொண்டே என் காலடி சக்கரத்தில் மாட்டிக்கொண்டு துடிதுடித்து உயிர் நீத்தாள்.

என்னால் தானே இன்று கயல் இறந்து விட்டாள். கயலின் வாழ்க்கையில் அவளுக்கு தெரியாமலேயே ஒரு அழியா இடம் சொக்குவிற்கு உண்டு. அந்த அழகான இடத்தையும், உறவையும் நான் நசுக்கி விட்டேனே...!

அவளை என் காலாலே மிதித்து, நசுக்கி கொன்று விட்டேன். இந்த கொலைக்கு எனக்கு என்ன தண்டனை தரப்போகிறது இந்த சமுதாயம்...?

பி.கு: இந்த சிறுகதையை “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.



Tuesday, December 1, 2009

பலசரக்குக்கடை

திறமை என்பது மனிதனை தரம் பார்க்கக்கூடிய கருவி. அந்த கருவியை வைத்தே ஒருவனை அறிவுள்ளவன் மற்றும் அறிவற்றவன் என பிரிக்கப்படுகிறான்.

சில வருடங்களுக்கு முன்பு நான் சென்னை ஈக்காட்டுதாங்கலில் வசித்து வந்தேன். அப்போது, அந்த பகுதி எவரும் அறிந்திடப்படாத, எந்த வகையிலும் சிறப்பற்ற பகுதி. இன்று அந்த பகுதியை சுற்றிலும் மென்பொருள் நிறுவனங்கள், வங்கிகள், நட்சத்திர விடுதிகள், கடை வீதிகள் என ஏகப்பட்ட முன்னேற்றம்.

எங்களுடைய அன்றாட உணவுப்பொருள்கள் தேவைகளுக்காக அருகில் உள்ள அம்பாள் நகர் என்ற இடத்திலுள்ள ஒரு பிரபல பலசரக்குக்கடையில் தான் வாங்குவோம்.



பலசரக்குக்கடையுனுடைய முதலாளி வியாபாரத்தில் கெட்டிக்காரர். ஈக்காட்டுதாங்களை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இந்த கடையையே தேடி வருவார்கள். எல்லோரும் அவரை அண்ணாச்சி என்று தான் அழைப்பார்கள். கடையில் வேலைக்கு இரண்டு பேர் வைத்திருந்தார்.

மாதமுதல் தேதி என்பதால், அந்த மாதத்திற்கு தேவையான மொத்த தேவைகளை அன்றே ஒட்டுமொத்த வாங்குவதற்காக ஒரு தாளில் பொருள்களை எழுதி அண்ணாச்சியிடம் கொடுத்தேன்.

"இன்னிக்கு சாயங்காலத்துக்குல்லார சரக்கை உங்க வீட்டுக்கு, கடைப்பையனை எடுத்திட்டு வரசொல்லிடுறேன்", என்றார் அண்ணாச்சி.

"சரிங்க அண்ணாச்சி", என்று வீட்டிற்க்கு கிளம்பிவிட்டேன்.

இரண்டு நாட்கள் கடந்தது, இன்னும் நான் பலசரக்குகடையில் நான் பதிவு செய்த பொருள்கள் வரவில்லை.

ஏன் வரவில்லை என கேட்ப்பதற்க்காக, கடைவீதிக்கு சென்றேன்.

"என்ன அண்ணாச்சி, பதிவு செய்த பொருள்கள், இரண்டு நாளாகியும் இன்னும் வரவில்லை..?", என்று வினவினேன்

மன்னிச்சுக்கோங்க Sir.....!,
சரக்கை எடுத்துட்டு வந்த பையன் கடைக்கு புதுசு, அதனால சைக்கிள்ள வரும் போது பொருள்களை கீழ போட்டு சேதமாக்கிட்டான்....

டேய் மாரி, இங்க வாடா... என்றார் அண்ணாச்சி

என்ன அண்ணாச்சி....,? என்றான் மாரி

இவன் வந்து ஒரு வாரம் ஆகுது, இன்னும் ஒரு வேலையும் உருப்படி இல்ல....!

இவனுக்கு இந்த மாதம் கூலியை நிப்பாட்டுனாதான் திருந்துவான்..

நேத்து ஒருத்தருக்கு மைதா மாவை கட்டுனா, கோல மாவைக்கட்டி கொடுத்துட்டான்...

"நீங்க போங்கய்யா.., நான் சுடலைய விட்டு பொருள்களை அனுப்பி வைக்குறேன்", என்றார் அண்ணாச்சி.

ஏன் இந்த அண்ணாச்சி, அந்த பையனை இப்படி ஏசுகிறார்...?

பலசரக்குக்கடைக்கு மாரி வந்து ஒரு வாரம் தான் ஆகிறது, அண்ணச்சி மற்றும் வேலையின் மேல் உள்ள பதட்டதினாலே, பொருள்களை சேதமாக்கிட்டான் என ஏன் அண்ணாச்சி என்னவில்லை...?

சுடலையும் இதே போல், பொருள்களை சேதமாக்கமாட்டான் என்பதில் என்ன நிச்சயம்...?

மாதக்கூலியை நிப்பாட்டினால், இவனை நம்பி இருக்கும் இவன் குடும்பம் என்ன ஆகும் என ஏன் அண்ணாச்சி யோசிக்கவில்லை...?, என்று எனக்குள் நானாக முனங்கிக்கொண்டு கிளம்பினேன்.

சில மாதங்களுக்கு முன்பு அதே பையன் மாரியை, சென்னை சாலிகிராமத்தில் ஒரு பலசரக்குக்கடையில் பார்த்தேன்.

"டேய் மாரி என்னடா இங்கே..?" என கேட்டேன்.

"இந்த பலசரக்குக்கடைக்கு முதலாளியாக இருக்கிறேன்...!" என்றான் மாரி...

பழைய முதலாளி அவனை வேலையைவிட்டு துரத்தியதாகவும் கூறினான்.

"எப்படி கடை போகிறது...?", என கேட்டேன்

"ரொம்ப நல்லா போகுதுய்யா..., இதே மாதிரி சென்னையில் மூணு இடத்துல கடை நல்லா போகுது...!" என்றான் மாரி

இதே மாரியை, ஒரு காலத்தில் உதவாக்கரை என ஒரு முதலாளி கூறினான், ஆனால் இன்றோ...?

அண்ணாச்சி, இந்த முதலாளி மாரியை தொழிலாளியாக இருக்கும் போது சரியாக
பயன்படுத்தியிருந்தால்......?

ஒரு பலசரக்குக்கடையிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதத்தில் உபயோகமாக இருக்கும். அரிசியும் தேவை, உப்பும் தேவை....! அரிசியை விட உப்புதான் சிறந்தது எனவும், உப்பை விட அரிசி தான் சிறந்தது எனவும் தரம் பிரிக்க முடியாது. அதே போல தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவகையில் திறமையானவர்கள்.இந்த உலகதில் பிறந்த யவருமே முட்டாள்கள் இல்லை....

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு குரு,அவனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏதாவது ஒன்று இருக்கும். ஒவ்வொருவனுக்க்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருக்கும், சிலருக்கு வெளிச்சம் உடனே கிடைக்கும், பலருக்கு சில காலம் கடந்து கிடைக்கும்.

இது பலசரக்குக்கடைக்கு மட்டுமல்ல, அனைத்து துறைக்கும் பொதுவானதே.........!