நன்றி,
யூத்புல் விகடன்
இவ்வுலகில் வாழும் மனிதன், பலகோடி மனிதர்களிடமிருந்து பலகோடி அனுபவங்களை சந்தித்திருப்பான், ஆனால் ஒரு சில மனிதர்களே, அனுபவங்களே நினைவில் நிலைக்கொள்கிறது.
ஞாபகம் என்பது நமக்கு நடக்கும் இனிமையான அல்லது கசப்பான அனுபவங்களை திரும்பத்திரும்ப நினைபடுத்தி கொண்டே இருப்பது தான், அந்த நிலையான நினைவுகள் நம் உயிருள்ளவரை அழியாது.
இந்த நினைவலைகள் அறிவியல் பூர்வமாகவும் உண்மையாக இருக்கிறது. மனித இனத்திற்க்கல்லாமல், அனைத்து உயிரினங்களுக்கும் வரக்கூடிய ஒரு செயல். மூளையுடைய ஆழ்த்திரனில் நிலைகொண்டு, அனிச்சையாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு நம் நினைவு.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதோ ஒன்றை நினைவுப்படுத்தி கொண்டே இருக்கிறது.அந்த இனிமையான நிகழ்வுகள் பலதரப்பட்ட அனுபவங்களையும் நினைவு கூறுகிறது.
உதாரணமாக, பத்து வருடங்களுக்கு முன்பு நாம் கேட்ட பாடல்கள், சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள், பழகிய நண்பர்கள், படித்த புத்தகங்கள், இது போன்ற பல நிகழ்வுகளை திரும்ப நாம் சந்திக்கும் போது அந்த கால கட்ட நினைவுகளை பிரதிபலிக்கிறது. அது ஒரு இனிமையான நிகழ்வாகவும் இருக்கலாம், இல்லை கசப்பான நிகழ்வாகவும் இருக்கலாம். இந்த இரண்டுமே வலியுடன் நம் கண்களில் கண்ணீர் கலந்த ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது.
சமீபத்தில் நான் தனிமையில் இருக்கும்பொழுது, கேட்ட ஒரு பாடல் என் பள்ளிப்பருவ அனுபவங்களை பிரதிபலித்தது, அந்த நினைவு நீண்ட நேரம் தொடர்ந்தது(என் கைப்பேசி மணி அடிக்கும் வரை).
இந்த நினைவுகள் பெரும்பாலும் நாம் சந்தித்த, அனுபவித்த அதே நிகழ்வுகளை திரும்ப சந்திக்க இல்லை அனுபவிக்க நேரிடும்போதோ, தனிமையில் இருக்கும் போதோ, இரவு பொழுதில் இருக்கும் அந்த அமைதியான தருணங்களிலோ புலன்படும்.
அந்த இனிமையான நினைவுகள் திரும்ப வராதா...?, என ஏங்கும் உயிர்கள் பல கோடி.
நினைவுகளிலே மிக அழகான, ஒவ்வொருவனுக்கும் மகிழ்ச்சிக்கொடுக்ககூடிய ஒரு நிகழ்வு என்பது, நாம் பெற்ற அனைத்து இனிமையான நினைவுகளை திரும்பபெரும் அந்த நினைவே....!