Saturday, September 12, 2009

யார் அந்த ஆதி மனிதன்.....?

மனிதன் இந்த மண்ணில் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?




குரங்கில் இருந்து தான் மனிதன் வளர்ந்தான் என்று அறிவியல் சொல்லுகிறது. அப்படி இருக்க ஆதாம் தான் இந்த உலகத்தின் முதல் மனிதன் என்று வேதங்களும் கூறுகிறது, அப்படியானால் ஆதாம் மனிதனா அல்லது குரங்கா?

ஆதாம் மண்ணிலிருந்து படைக்க பட்டதாகவும், ஏவாள் அவன் உடலிலிருந்து படைக்க பட்டதாகவும் அறிவியலும், வேதங்களும் கூறுகிறது.

ஆதாமூம் ஏவாளூம் பேசிய முதல் வார்த்தை என்ன? அது எந்த ,மொழியில் இருந்துருக்க கூடும்?

இவ்விருவரும் எந்த நாட்டில் படைக்க பட்டார்கள் ?

அவர்கள் எந்த மதத்தை , எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்?

ஆதாமூம் ஏவாளூம் தான் நமக்கு முன்னவர்கள் என்றால் , இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் சகோதர சகோதரிகள், அப்படி இருக்க மற்ற உறவுகள் எங்கிருந்து யாரால் படைக்க பட்டது?

ஒரு தாய் மக்களான நம்மிடம் நல்லவன், கெட்டவன், உயர்ந்த்வன், தாழ்ந்தவன், பணம், பொய், திருட்டு, சண்டை, அடிமைத்தனம் போன்றவை எங்கிருந்து யாரால் வந்தது?

விலங்கினங்கள் எங்கிருந்து யாரால் படைக்க பட்டது?

மண்ணுலகம், விண்ணுலகம்(சொர்க்கம் , நரகம்) போன்ற இரு வேறு உலகம் இருப்பதாக கூறப்படுகிறது. மனிதனுக்கும் விலங்கினத்துக்கும் மரணம் என்ற ஒரு நிலை வருகிறது. மரணம் தான் உயிரினத்திற்கு இறுதி நிலை என்றால் உயிரினங்கள் எதற்காக மண்ணில் படைக்க பெற்றார்கள்?

பின்வருவன அனைத்தும் மனிதன் இம்மண்ணுலகில் செய்யும் பாரம்பரிய நடவடிக்கைகள்,

- பிறப்பது

- வளர்வது

- இறப்பது

வாழ்வதற்கு உயிரினங்கள் என்றால், எதற்கு மரணம்? இதற்க்குத்தான் இவர்கள் மண்ணில் படைக்க பெற்றார்களா ?

இதை இதற்கு முன்னால் சிந்தித்து பார்த்ததுண்டா, பார்த்திருந்தால் மகிழ்ச்சி, இல்லையெனில் சற்று ஆழ்ந்து சிந்தித்து விட்டு உங்களுடைய பதிலை எனக்கு பதிவு செய்யுங்கள்...
 

1 comment:

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு தங்கள் எழுத்துகள் s ramakrishnanai நினைவு படுத்தியது ....நல்ல முயற்சி ......முதிர்ச்சியான முயற்சிகளை எதிர்பார்கிறேன்